Saturday 11 December 2010

Atharva in Gautham Menon Film ?

ஒவ்வொருமுறை கௌதம் மேனன் படம் துவங்கும் போதும் அதில் அஜீத் நடிக்கிறார் என்ற செய்திகள் வரும். ஆனால் என்ன குழப்பம் வருமோ அதில் அஜீத் நடிக்க மாட்டார்.வர் அடுத்து இயக்கயிருக்கும் 'துப்பறியும் ஆனந்த்' படத்தில் அஜீத் நடிப்பது உறுதி என்று முடிவாக இருந்த நிலையில். தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் உருவாகிவரும் 'மங்காத்தா' படத்தில் நடிக்க சென்றுவிட்டார் அஜீத். இதனால் ரொம்பவும் அப்செட்டான கௌதம், அஜீத்துக்காக நான் காத்திருக்க மாட்டேன். நண்பர் சூர்யா போன்ற நல்ல நடிகர்களுக்கு வேண்டுமானால் காத்திருக்கலாம், அஜீத்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என ஒரே போடு போட்டார் கௌதம். இதெல்லாம் நமக்கு தெரிந்த செய்திதானே, இப்போ புது மேட்டருக்கு வருவோம்...


துப்பறியும் ஆனந்த்' படத்தில் அஜீத்துக்கு பதிலாக சூர்யா தான் நடிப்பார் என பேசப்பட்டு வந்த நிலையில் அந்த படத்தில் அதர்வாவை நடிக்க வைக்கப்போகிறார் கௌதம் என தகவல்கள் கசிகின்றன. 'பாணா காத்தாடி' படத்தின் மூலம் ஏற்கெனவே ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் அதர்வா. தன் தந்தை முரளியின் மறைவிற்கு பின்னர் அதர்வாவிற்கு நல்ல படங்கள் அமைய வேண்டும் என்பது எல்லாருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அந்த நிலையில் 'பாணா காத்தாடி' படத்தில் குப்பத்து ராஜாவாக வந்து கலக்கிய அதர்வா அடுத்து கௌதம் மேனனின் ஸ்டைலிஷான க்ளாசி ஹீரோவாக திரையில் அசத்தப் போகிறார் என்பது சந்தோஷமான விஷயம்.

இதுபற்றி திரைவட்டாரத்தில் விசாரித்தபோது கௌதம் மேனன் படத்தில் அதர்வா நடிக்க இருப்பது உண்மைதான்.

No comments:

Post a Comment