Thursday 11 March 2010

ரஞ்சிதா தலைமறைவு: மணிரத்னம் ?

விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடித்து மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் பிரியாமணி, ரஞ்சிதா இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.


பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. சில வசனக்காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. அதை ஓரிரு நாளில் முடித்து விட்டு ரிலீஸ் ஏற்பாடுகளில் இறங்க மணிரத்னம் திட்டமிட்டார்.
இந்நிலையில்  நித்யானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன.   ரஞ்சிதாவிடம் விசாரணை செய்ய புகார்கள் குவிந்துள்ளன.  போலீசாரும் அவரை தேடுகிறது.
சென்னையில் உள்ள ரஞ்சிதாவின் வீடுகள் பூட்டப்பட்டுள்ளன.  தொலைபேசி,கைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை கேட்டு கணவர் ராகேஷ் குடும்பம் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.   ரஞ்சிதாவின் கணவர் மனவருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நடந்த இந்த சம்பவங்களால் மன உளைச்சல் ஏற்பட்டு ரஞ்சிதா ஆந்திராவில் உள்ள தோழியின் வீட்டில் ரகசியமாக இருப்பதாகவும்,  அங்கே அவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார் என்றும் பேசப்பட்டது.


பின்னர் அவர் கேரளாவில் உள்ள தோழியில் வீட்டில் இருப்பதாக தகவல் வந்துள்ளன.
ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் சில இருப்பதால் அவரை தேடிப்தேடிப்பார்த்து அலுத்துவிட்டது மணிரத்னம் டீம்.  

எடுத்து முடித்த காட்சிகளை வைத்து  டப்பிங் வேற யாரையாவது வைத்து பேசிவிட்டாலும்  படத்தில் பினிசிங் இருக்காது என்று கவலைப்படுகிறாராம் மணி.
இது வரை தங்களை தொடர்புகொள்ளாமலும் இருக்கிறார் ரஞ்சிதா.  இந்நிலையில் டப்பிங் வேறு ஒருவரை வைத்து பேசுவதும் முறையல்ல.   நாளைக்கு இது வேறு பிரச்சனையை கிளப்பலாம்.  மேலும், ரிலீஸ் நேரத்தில் ரஞ்சிதா நடித்த படம் என்பதால் வேறு எதாவது கோர்ட் பிரச்சனை வந்தாலும் வரலாம் என்று யோசித்திருக்கிறார் மணி.


அதனால் அதிரடியாக ஒரு ப்ளான் போட்டிருக்கிறார் மணி.
எதுக்கு இத்தனை டென்ஷன்.  ரஞ்சிதா இதுவரை நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி நீக்கி விட்டு அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்துவிடலாம் என்பதுதான் அவர் போட்டுள்ள ப்ளான் என்கிறார்கள்.

No comments:

Post a Comment